districts

img

நாகூர் பட்டினச்சேரி கடலில் கச்சா எண்ணெய் கலப்பு: அமைச்சர் ஆய்வு

நாகப்பட்டினம், மார்ச் 9-  நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டி னச்சேரி மீனவர் கிராம கடற்கரையில் அமைந்துள்ள சிபிசிஎல் பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண் ணெய் கடலில் கலந்ததை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன்  பார்வையிட்டார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர்  வி.பி.நாகை மாலி ஆய்வில் பங்கேற்றார். நாகப்பட்டினம் வட்டம் நாகூர் பட்டி னர்சேரி மீனவர் கிராம கடற்கரையில் சிபி சிஎல் பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்த மான எண்ணெய் குழாய் சுமார் 20 ஆண்டு களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இக் குழாய் வழியாக கச்சா எண்ணெய் ஆனது காரைக்கால் மார்க் துறைமுகம் கொண்டு சென்று கப்பல் வழியே சென்னைக்கு அனுப்பப்படுகிறது.  இந்நிலையில், கடந்த மார்ச் 2 அன்று  குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண் ணெய் கடலில் கலந்தது. இத்தகவல்  பொது  மேலாளர் சிபிசிஎல் நிறுவனத்திற்கு தெரி விக்கப்பட்டு எண்ணெய் கசிவு சரி செய் யப்பட்டது.  மேலும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி யர் மார்ச் 6 அன்று நேரடியாக பார்வை யிட்டு, எண்ணெய் குழாய் கசிவு சரி செய்  யப்பட்ட பணியானது உறுதி செய்யப் பட்டது.  இந்நிலையில், மீனவர்கள் அறிவித்த சிபிசிஎல் நிறுவனம் முற்றுகையிடும் போராட்டத்தை கைவிட்டு வியாழனன்று முதல் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.  நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் வி.பி.நாகை மாலி, மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், மாவட்ட வரு வாய் அலுவலர் வி.ஷகிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பிரதிவி ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.