districts

img

நாகை விளையாட்டு அரங்கத்தில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்பு

நாகப்பட்டினம், நவ.8 - நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிய நவீன உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது. இதில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி பங்கேற்றார். நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிய நவீன உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். ரூ.60 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி கூடமும், ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய நவீன உடற்பயிற்சி சாதனங்களும் நிறுவப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாவட்ட விளையாட்டு மைதா னத்தில் தினமும் பயிற்சி பெறும் மாணவர்கள் என அனைவரும் உடற்பயிற்சி செய்வதற்கு உடற்பயிற்சி கூடம் தேவை என கோரிக்கை எழுந்தது. மாண வர்கள் மற்றும் விளை யாட்டு ஆர்வலர்கள் வைத்த  கோரிக்கையை அரசு பரி சீலித்த நிலையில், செவ்வா யன்று உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சி யர் வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 167 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத் திறனாளித ்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன. வேளாண் துறை மூலம் தென்னங்கன்று மற்றும் உரங்கள் வழங்கப் பட்டன.  இந்நிகழ்வில் சிபிஎம் சட்டமன்ற குழு தலைவரும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.நாகைமாலி, மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌத மன், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்பு ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.