districts

img

கடந்த 10 ஆண்டுகளில் கச்சத் தீவை மீட்காதது ஏன்?

நாகப்பட்டினம், ஏப்.2- திடீரென தமிழக மீனவர்  கள் மீது அக்கறை இருப்பது  போல பேசும் பிரதமர் நரேந்  திர மோடி, கடந்த 10 ஆண்டு களில் கச்சத்தீவை மீட்டி ருக்க வேண்டியது தானே..? என்று சட்டத்துறை அமைச் சர் எஸ்.ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகப்பட்டினம் தொகுதியில் சிபிஐ வேட்பா ளரை ஆதரித்து, எஸ். ரகுபதி பிரச்சாரம் செய்  தார். அப்போது அவர் பேசியிருப்பதாவது:

கடந்த 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கு  பாஜக, கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது. இலங்கையுடன் நெருங்கிய தொடர்  பில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அவ ரது ஆட்சியில் கச்சத்தீவை மீட்டிருக்கலாமே. ஏன், செய்யவில்லை..? 

திமுகவுக்கு மாற்று அதிமுக என்று இருந்த  தமிழகத்தில், திமுகவுக்கு மாற்று அதிமுகதான்  என்று அக்கட்சியின் தொண்டர்கள் துணிந்து சொல்வதற்குகூட தைரியம் இல்லாத நிலையை  எடப்பாடி கே. பழனிசாமி உருவாக்கிவிட்டாா். அவர் அதிமுகவை அழித்து வருகிறார். இவ் வாறு அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.