வேதாரண்யம், மார்ச் 13 - நாகப்பட்டினம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு மற்றும் கோடியக்கரை ஊராட்சி பகுதியில் 25 சதுர கி.மீ பரப்பளவில் பசுமை மாறா காடுகள் உள்ளன. இந்த காட்டில் பறவைகள் மற்றும் வனவிலங்குகள் சரணாலயம் அமைந்திருக்கிறது. இங்கு வெளிமான், புள்ளிமான், முயல், நரி, குரங்கு, பல வகையான பாம்புகள், காட்டுப்பன்றிகள், குதிரை உள்ளிட்ட வன விலங்குகளும் வசித்து வருகின்றன. பறவைகள் சரணாலயத்தில் சீசன் நேரத்தில் நாந்தான் குருவி, சிட்டுக்குருவி, மீன் கொத்தி பறவை, விதவித மான வடிவங்களில், நிறங்களிலான வெளிநாட்டு பறவை கள் முகாமிட்டு வருகின்றன. காட்டுப் பகுதியில் தொடங்கும் இடமான ராமர் பாதம் பகுதியில் மூலிகை செடிகள் உள்ளன. இந்த மூலிகை வனப்பகுதியில், வயிற்று வலி, சளி-காய்ச்சல், மூக்கடைப்பு உள்ளிட்ட பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்தும் மூலிகை செடிகள் உள்ளன. சர்க்கரை நோய்களுக்கு அரு மருந்தான ஆவாரம் பூ இங்கு பெரு மளவில் உள்ளது. இந்த ஆவாரம் பூக்கள் தற்போது கோடியக்கரை காட்டுப்பகுதி மட்டுமின்றி அங்கு உள்ள சாலைகளின் இருபுறமும் பூத்துக் குலுங்குகின்றன. மஞ்சள் போர்வை போர்த்தியது போல் பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூக்கள், அந்த பகுதியில் செல்வோரின் கண்களை கவரும் வகை யில் உள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் செல்போ னில் படம் எடுத்துச் செல்கின்றனர்.