வேதாரண்யம், மே 22- நாகப்பட்டனம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோவில்பத்துவில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளின் தரத்தை ஆய்வு செய்து, சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை உடனடியாக வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல நான்கு ரயில்வே வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.