நாகப்பட்டினம், டிச.17- சாட்டியக்குடி ஊராட்சி யில் அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட் டம் கீழ்வேளூர் தாலுகா சாட்டியக்குடி ஊராட்சியில் உள்ள கொத்தங்குடி கிரா மத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. அதை உடனடி யாக செப்பனிட வேண்டும். பழுதடைந்த மின்கம்பங் களை மாற்றி புதிய மின் கம்பங்கள் அமைத்து தெரு விளக்கு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் சாட்டிய குடி பேருந்து நிறுத்தும் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தை யன் தலைமை வகித்தார். போராட்டத்தின் நோக்கம் குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எம்.என். அம்பிகா பதி, ஏ.சிவகுமார், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அக்கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக அரசு தரப்பில் உத்தரவாதம் அளித்ததால், உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.