districts

img

மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பிராந்தியங்கரை மேற்கு கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது திடீரென பெய்த மழையால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாயின. இதையறிந்து, அப்பகுதியில் திரண்ட விவசாயிகள் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.