districts

img

ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்

நாகப்பட்டினம், மார்ச் 23- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாகப்பட்டினம் மாவட் டத்தின் அனைத்து பகுதிகளிலும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்று வருகிறது.  நாகை தெற்கு ஒன்றியம் சார்பில் அகர ஒரத்தூர், நாகை வடக்கு ஒன்றியம் சிக்கல் கடை தெரு, கீழ்வேளூர் வடக்கு ஒன்றியம் சார்பில் இருக்கை, கீழ்வேளூர் கடை தெரு, கீழ்வேளூர் தெற்கு ஒன்றியம் தேவூர் கடை தெரு, கீழையூர் மேற்கு ஒன்றியம் பெரிய தும்பூர், கீழையூர், மேலப்பிடாகை, திருக் குவளை ஆகிய ஊராட்சிகளில் தெரு முனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.  இதில் சிபிஎம் நாகை மாவட்டச் செயலா ளர் வி.மாரிமுத்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ், கீழ்வே ளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம். அபுபக்கர், கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்தையன், நாகை வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.வி.ராஜா, நாகை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடி வேல், கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலா ளர் டி.வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;