districts

img

கூட்டுறவு வார விழா: நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்பு

நாகப்பட்டினம், நவ.18- நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு துறை சார்பில் நவம்பர் 14 முதல் ஒரு வாரமாக கூட்டுறவு  வார விழா நடைபெற்று வருகிறது. கூட்டுறவு சங்கங்கள்,  கூட்டுறவு அங்காடி, நியாயவிலை கடைகள், மீனவர்க ளுக்கான கூட்டுறவு அங்காடி என பல்வேறு கூட்டுறவு துறை சார்ந்த மையங்களை ஒருங்கிணைத்து கூட்டுற வின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு புரியும் வகை யில் ஆண்டுதோறும் கூட்டுறவு வார விழா பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனை வரையும் ஒருங்கிணைத்து விழா நடத்தப்படுகிறது.  கூட்டுறவு துறை மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்க ளுக்கு கடன் வழங்கியும் விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வாழ்வில் முன் னேற்றம் அளிக்கும் வகையில் கடன் வழங்கும் திட்டமும் இந்நிகழ்வில் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் கூட்டுறவுத் துறை சார்பில் மருந்தகங்கள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு பய னளிக்கும் வகையில் உயிர் காக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. முழு நேர அங்காடிகள், பகுதி நேர அங்காடிகள், கூட்டுறவு பண்டக சாலைகள் வழியாக பொது  விநியோகத் திட்டத்தில் பயன்படும் அனைத்து குடும்ப  அட்டைதாரர்களுக்கும் சீராக பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதிலும் பயிர் காப்பீடு  திட்டமானது ரூ.150 கோடி இலக்குடன் விவசாய பெரு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நடைமுறைப்ப டுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு கீழ்வேளூர்  சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி.மாவட்ட ஆட்சி யர் மருத்துவர் அருண் தம்புராஜ், மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், தாட்கோ தலைவர் உ. மதிவாணன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.