நாகப்பட்டினம், மார்ச் 13- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கீழவெண்மணி தியாகிகள் நினைவகத்தில் இந்திய தொழிற்சங்க மையம் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் சமூக வலைதள மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் ஞாயி றன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் இரா. பேச்சிமுத்து தலைமை வகித்தார். சிஐடியு நாகை மாவட்ட செயலாளர் கே.தங்கமணி வரவேற்றுப் பேசி னார். தமிழகம் முழுவதும் உள்ள சமூக வலைதள மாவட்ட பொறுப்பாளர்கள் விவாதத்தில் பேசினர். எதிர்கால கடமைகள் குறித்து எடுத்துரைத்தனர். இறுதியாக சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன் சிறப்பு ரையாற்றினார். சமூக வலைதள மாநில கன்வீனரும், சிஐடியு மாநில செயலாளருமான கோபிகுமார் வாழ்த்தி பேசினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் வசந்தி, இரா.மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர்.