நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆய்மூர் கிராமத்தில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்து கற்கள் நடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்நிலையில் அந்த கிராமத்தில் நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை தொடங்கினால் விவசாய நிலங்கள் மற்றும் மாடி-கூரை வீடுகளை அழிக்கப்பட கூடிய சூழ்நிலை ஏற்படும். எனவே நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை வேறு வழியில் மாற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.