districts

img

கீழ்வேளூரில் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் வாக்குச் சேகரிப்பு

நாகப்பட்டினம், ஏப்.4 - நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் வை. செல்வ ராஜை ஆதரித்து, சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் வாக்குகள் சேகரித்தனர்.

கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழ் வேளூர் ஒன்றிய பகுதிகளான அத்திப்புலியூர், அகரகடம் பனூர், ஆழியூர், வடகரை, இராதாமங்கலம், காக்கழனி, தேவூர், வெண்மணி, சாட்டியக்குடி, கோவில்கண்ணாப் பூர், ஆதமங்கலம், தெற்குப்பனையூர் உள்ளிட்ட பகுதி களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வ ராஜூக்கு ஆதரவாக, கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குச் சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். 

அனைத்து ஊராட்சிகளிலும் வேட்பாளருக்கு பொது மக்கள் ஆதரவு தெரிவித்தனர். 

இந்த பிரச்சார சுற்றுப் பயணத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பிரமணியன், கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எம்.அபுபக்கர், தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்தையன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.