நாகப்பட்டினம், மார்ச் 27 - ஆந்தகுடி கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையை வி.பி.நாகைமாலி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வே ளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஆந்தகுடி ஊராட்சிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து ஆந்தகுடி வரை செல்லும் புதிய பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இப்பேருந்து நாகப்பட்டினத்தில் துவங்கி சிக்கல், கீழ்வேளூர், தேவூர், கிள்ளுகுடி, கூரத்தான்குடி வழியாக ஆந்தகுடி வரை செல்லும். இப்பேருந்து பல்வேறு கிராமங் களை ஒன்றிணைத்து செல்வதால் பொதுமக்கள் நகரத்திற்கு சென்று வர சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கவுதமன் ஆகியோர் கொடியசைத்து பேருந்தை துவக்கி வைத்தனர்.