நாகப்பட்டினம், நவ.30- நாகப்பட்டினம் மாவட் டம் தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் உண்ணாவிரத போராட் டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் வீரமணி தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து துவக்கி வைத் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.லதா வாழ்த் திப் பேசினார். ஒன்றியச் செயலாளர் அ.ராஜா, வாலி பர் சங்க மாவட்ட செயலாளர் அருள்தாஸ் மற்றும் ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மணக்குடி ஊராட்சியில் அரசு ஆரம்ப துணை சுகா தார நிலையம் புனரமைத்து கட்டப்பட வேண்டும், ஆலங் குடி முதல் மணக்குடி வரை உள்ள சாலையை சரி செய்ய வேண்டும், மணக்குடி ஊராட்சியில் இருக்கும் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், திருக் குவளை வட்டாட்சியர், காவல்துறை, சுகாதார துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கோரிக்கை களை நிறைவேற்றி தருவ தாக கூறியதையடுத்து உண் ணாவிரத போராட்டம் தற்கா லிகமாக ஒத்திவைக்கப்பட் டது.