தேனி, ஜன.27- சுத்திகரிப்பு நிலையத்திலி ருத்து வெளிவரும் கழிவுநீர் முல் லைப்பெரியாற்றில் கலக்கும் அபாயம் இருப்பதால் சுத்திக ரிப்பு நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலி யுறுத்தி நகராட்சி அலுவல கத்தை கிராம மக்கள் முற்றுகை யிட்டனர். கூடலூர் நகராட்சியில் வெளி யேறும் கழிவு நீர் முழுவதுமாக முல்லைப் பெரியாற்றில் கலக்கி றது. இதனால் கூடலூரை ஒட்டி யுள்ள கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங் கூர்பாளையம், சுருளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆற்றி லிருந்து நேரடியாக குடிநீர் பம் பிங் செய்து சப்ளை செய்வதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந் நிலையில் கூடலூர் நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.50 லட் சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டது. சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக கருநாக்க முத்தன்பட்டி ரோட்டில் முல்லை பெரியாறு சிறு வாய்க்கால் கீழ் புறமாக இடம் தேர்வு செய்யப் பட்டது. சுத்திகரிப்பு நிலையம் சிறு வாய்க்கால் மேற்புறமாக அமைத்து தருமாறு கடந்த செப்டம்பர் மாதம் கூடலூர் நக ராட்சி ஆணையாளருக்கு ஆங் கூர்பாளையம், சாமாண்டி புரம், மஞ்சக்குளம் பொதுமக் கள் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் தற் போது சுத்திகரிப்பு நிலைய பணி தொடங்க உள்ளதாக வந்த தக வலை அடுத்து செவ்வாயன்று ஆங்கூர்பாளையம், சாமாண்டி புரம், மஞ்சக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுமார் 25 பேர்கள் சுத்திகரிப்பு நிலைய இடத்தை மாற்றி அமைக்கக் கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து நகராட்சியின் தற்போதைய ஆணையாளர் சித்தார்த்தன் சுத்திகரிப்பு நிலை யம் கட்ட உள்ள இடத்தை அதி காரிகளுடன் சென்று பார்வை யிட்டார். பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், இதுகுறித்து பொதுமக்களின் கோரிக்கை அர சுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். அதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கலைந்து சென்றனர்.