districts

img

தேனியில் மேம்பால பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தேனி,பிப்.14- தேனியில் ரயில்வே மேம்  பால பணிகளுக்காக கடை  ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மதுரை போடிநாயக்க னூர் அகல ரயில் பாதையில் தேனி வரை பயணிகள்  ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், தேனியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரண்மனை புதூர் விலக்கு அருகே 98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக அரண்மனை புதூர் விலக்கு ரயில் பாதை  அருகே உள்ள ஆக்கிரமிப்பு கள் மாவட்ட ஆட்சியர் ஷஜீ வனா உத்தரவுப்படி பெரிய குளம் ஆர்டிஓ சிந்து முன்னி லையில் வருவாய் துறை அதி காரிகள் மற்றும் போலீசார் இணைந்து அகற்றி வரு கின்றனர். முதற்கட்டமாக கடைகள் முழுவதும் அகற்றும் பணி  நடந்து வருகிறது. குடி யிருப்புகளில் உள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.