districts

img

மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்

மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் சி.முருகன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க செயலாளர் வி.ராஜேந்திரன், சிபிஎம் தாலுகா செயலாளர் இ.தர்மர், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சு.வெண்மணி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.சண்முகம், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் பாலையா, காமுத்துரை, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டி..நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.