தேனி, பிப்.25- தேனி மாவட்டம், கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பணியாளர்களின் எண் ணிக்கை, வருகை பதிவேடு, வைப்பறை, விவசாயிகளுக்கு உரங்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, இருப்பு எண் ணிக்கை, அதற்கான பதிவேடுகள் மற்றும் விலைப்பட்டியல் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறுகை யில், தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயி களுக்கு தேவையான உரங்கள் விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத் தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவை யான உரங்களான யூரியா 1009 மெ. டன்னும், டிஏபி 1121 மெ.டன்னும் பொட் டாஷ் 533 மெ.டன் மற்றும் கலப்பு உரங்கள் 3006 மெ.டன்னும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரங்கள் விநி யோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, இருப்பு எண்ணிக்கை, அதற்கான பதிவேடு கள் மற்றும் விலைப்பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இச்சங்கத் தின் மூலம் மாதந்தோறும் 1500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உரம் விநியோ கம் செய்யப்பட்டு, பயடைந்து வருகின்ற னர். மேலும், விவசாயிகளுக்கு தரமான உரங்களை விநியோகம் செய்திடவும், இருப்பு தொடர்பான விபரங்களை உரிய பதிவேடுகளில் தினசரி பதிவு செய்திடவும், பருவ காலங்களுக்கு தேவையான உரத் தினை இருப்பு வைத்து விநியோகம் செய் திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, உத்தமபாளை யம் வருவாய் கோட்டாட்சியர் இரா.பால் பாண்டி, சம்பந்தப்பட்ட துறை அலு வலர்கள், காமாட்சிபுரம் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்க உதவி செய லாளர் மணிகண்டன், அலுவலர்கள் உட னிருந்தனர்.