தேனி, ஏப்.13- தேனி மாவட்டம் போடிநாயக்க னூரில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மோடியின் முக்கிய பகுதிகளான பார்க் நிறுத்தம், வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை, வள்ளுவர் சிலை, முத்துராமலிங்க தேவர் சிலை, வ.உ.சிதம்பரனார் சிலை, காமராஜர் சிலை பகுதிகளில் நடந்து சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அவரு டன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உடன் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது தேர்தல் பரப்புரை ஆற்றிய முத்தரசன், ‘‘நாம் இந்திய ஜனநாயகத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டையும் மதச்சார்பின்மை யையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மதவெறிக்கு எதிராக ஒரு யுத்தமாக நடக்கும் இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும்.
புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும் மென்மேலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்ட பொழுதும் சரி, தொழிலாளர்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்ட போதும் சரி, பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் எதிராக சட்டங் கள் இயற்றப்பட்ட போதும் சரி, அனைத்திலும் ஒன்றிய பாஜக அர சிற்குதுணை போனது அதிமுக அரசு.
‘திருவிழா திருட்டு’
திருவிழாக்களில் பெண்கள் பகுதி யில் திடீரென்று நகைகள் அவர்களு டைய உடைமைகள் திருடு போகும். பரபரப்பான சூழ்நிலையில் திடீரென்று அதோ திருடன் அங்கு ஓடுகிறான் என்று ஒரு குரல் கேட்கும். பொது மக்கள் அனைவரும் திருடனைத் தேடி அந்த குரல் கேட்டு எதிர் திசையில் செல்வார்கள்.
ஆனால், நகைகளை திருடிய திருடனே மக்களை திசை திருப்புவ தற்காக யாரும் இல்லாத பகுதியை திருடன் ஓடுகிறான் என்று கூறி தான் தப்பித்துக் கொள்வான்.
அதுபோலத்தான் நாட்டில் வேலை யின்மை, பொருளாதார சீர்கேடுகள், விலை உயர்வுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்புவ தற்காக மோடி அரசு கச்சத்தீவை திடீரென்று எழுப்பி வருகிறது.
மக்கள் பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக கச்சத்தீவு பிரச்ச னையை கையாண்டு தான் தப்பித்துக் கொள்ள நினைக்கிறார் மோடி. அதனை முறியடித்து வரும் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரான தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு வாக்க ளிக்க வேண்டும்’’ என்று கூறினார்.