தென்காசி, ஏப். 1 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) திருநெல்வேலி மின் திட்டம் சார்பிலான சிறப்புப் பேரவை குற்றாலத்தில் நடைபெற்றது பேரவைக்கு அமைப்பின் தலைவர் நாகையன் தலைமை தாங்கினார். தென்காசி கோட்டச் செயலாளர் இளையராஜா வரவேற்றார்.
மாநில துணைப் பொதுச்செயலாளர் பீர் முகம்மது ஷா கருத்துரையாற்றினார். மாநில துணைத்தலைவர் சந்திரன், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பேசினார்.
மதுரை, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடக் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கு தேர்தல் நிதியாக திருநெல்வேலி மின் திட்டத்தின் சார்பில் திருநெல்வேலி மாவட்டம் 3 லட்ச ரூபாயும் தென்காசி மாவட்டம் ஒரு லட்ச ரூபாயும் என மொத்தம் 4 லட்ச ரூபாயை மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் பீர் முகம்மது ஷாவிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர். சங்கத்தின் மாநிலச் செயலாளர் வண்ணமுத்து, சிஐடியு மாவட்டத் தலைவர் அயூப் கான், மாவட்டச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
திட்டச் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் பாலசுப்ரமணியன், தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பட்டமுத்து, திட்ட துணைச் செயலாளர்கள் பச்சையப்பன், கணபதி, திட்ட துணைத் தலைவர் பூலுடையார் மற்றும் கோட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.