districts

img

சாலைப்பணிகள் : ஆட்சியர் ஆய்வு  

தென்காசி, ஜன. 12 தென்காசி மாவட்டத்தில் சாலை பணி மற்றும்  வங்கி  கிளையை துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பட்டாடை கட்டி கிராம ஊராட்சியில் அனைத்து கிராமஅண்ணா மறுமலர்ச்சி திட்டம் -II மூலம் ரூ.4,04,000 மதிப்பில் வென்றிலிங்கபுரம் கிராமம் வடக்கு தெருவில் அமைக்கப்பட்ட சிமெண்ட் தளம் மற்றும் வாறுகால் அமைத்தல் பணிகளை  புதனன்று மாவட்ட ஆட்சித்தலை வர் ப.ஆகாஷ்  ஆய்வு செய்தார். மேலும் செங்கோட்டையில்  எச்டிஎப்சி  வங்கியின் புதிய கிளையை  புதனன்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மற்றும்  தென்காசி  நாடாளுமன்ற உறுப்பினர்  தனுஷ், எம்.குமார்  முன்னிலையில் உழவர் சந்தையை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார். தென்காசி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தின் பின்புறத்தில் செயல்பட்டு வந்த உழவர் சந்தையையும்  மதுரை- தென்காசி முக்கிய சாலைக்கு அருகில் செயல் படும் வகையில் அமைக்கப்பட்ட கட்டிடத்தையும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர்   தனுஷ் எம் குமார் முன்னிலை யில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்.

;