districts

img

எட்டையபுரத்தில் இளம் பாரதிகள் அணிவகுப்பு

தூத்துக்குடி, ஜூன் 25- தூத்துக்குடி எட்டையபுரம், நடுவிற்பட்டி சந்திரன் லட்சுமி மஹாலில் தோழர் பால் வண்ணன் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட 11-ஆவது மாநாடு நடைபெற்றது. மகாகவி பாரதி இல்லத்திலி ருந்து பாரதி வேடம் அணிந்து  குழந்தை பாரதிகள், எழுத்தாளர் கள், கலைஞர்கள் அணிவகுப்புடன் கலைப் பேரணி துவங்கி மாநாட்டு அரங்கத்தில் நிறைவு பெற்றது. பின்னர் தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாநாடு தலைமைக்குழு வாக மருத்துவர் சிவனாகரன், அபி ராமி முருகன், சாரதி, மணிமொழி நங்கை, பொண்ணு ராசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமுஎகச எட்டையபுரம் கிளை தலைவர் பொன் பரமானந்தம் வர வேற்புரை ஆற்றினார். நாகலாபுரம் கிளை செயலாளர் சேகர் அஞ்சலி தீர்மானம் முன் மொழிந்தார். தமு எகச மாநில மதிப்புறுத் தலைவர் ச.தமிழ்செல்வன் தொடக்கவுரை ஆற்றினார். மாநில துணை பொதுச்  செயலாளர் கவிஞர்.லட்சுமி காந்தன், கலை இலக்கிய பெரு மன்றம் தூத்துக்குடி மாவட்ட செய லாளர் பேராசிரியர் ரகு அந்தோணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமுஎகச கோவில்பட்டி செயலாளர் வேலுச்சாமி, திருச் செந்தூர் செயலாளர் பேச்சியம் மாள், கலை இரவு விடிய விடிய அனுமதி வழங்க வேண்டும். தமுஎகச தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர லிங்கம், பண்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் முகம்மது ஜக்கரி யா கலை - இலக்கிய அறிக்கை தாக்கல் செய்தார். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கு.ராமசுப்பு வேலை அறிக்கை தாக்கல் செய்தார்.  மாநில துணை பொதுச் செய லாளர், எழுத்தாளர் கா.உதயசங்கர் நிறைவுறை ஆற்றினார். நிறைவாக எட்டையபுரம் கிளை செயலாளர் பெ.சுப்பு ராஜ் நன்றி கூறினார்.