தூத்துக்குடி,மார்ச் 26 - இந்தியா (INDIA) கூட்டணியின் சார்பில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட் பாளர் கனிமொழி கருணாநிதி மார்ச் 26 செவ்வாய்க்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கோ.லட்சுமிபதி யிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சரு மான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி. சண்முகம் ஆகியோர் உடனி ருந்தனர். வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறு முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கே.எஸ்.அர்ஜூனன், தா.ராஜா, ஆர்.பேச்சிமுத்து, பா.புவிராஜ் ஆகி யோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு உள்ள கலைஞர் கருணாநிதியின் உருவச் சிலைக்கு வேட்பாளர் கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.