districts

நாளை குறைதீர் கூட்டம்

 தூத்துக்குடி, ஜூன் 28- தூத்துக்குடியில் 30 ஆம் தேதி (வியாழக்கிழமை) விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சி யர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான ‘விவ சாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 30.06.2022 அன்று காலை 11  மணியளவில் தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் “முத்து அரங் கத்தில்”நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவ சாயப் பெருமக்கள் அனைவரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு  விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சி யர் கேட்டுக் கொண்டுள்ளார்.

;