தூத்துக்குடி, மார்ச் 4- விளாத்திகுளத் தில் திமுக சார்பில் நடைபெற்ற, ‘முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில்’ தூத்துக் குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, “காலனிய சுரண்டலுக்கு இணையாக, மாநிலங்களைச் சுரண்டும் ஒன்றிய பாஜக அரசை விரட்டியடிக்கும் நேரமிது. தமிழர் விரோத பாஜகவின் வெறுப்புவாத அரசியலுக்கு இத்தேர்த லில் முடிவெழுதுவோம். பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே குடியேறி பிரச்சாரம் செய்தாலும் பாஜகவுக்கு ஓட்டு விழாது; நாடும் நமதே; நாற்பதும் நமதே!” என்றார்.
மற்றொரு நிகழ்வில் பேசிய கனி மொழி கருணாநிதி, “பிரதமர் பெயரில் இருக்கும் வீடு கட்டும் திட்டத்துக்கு கால் வாசி நிதியைத் தான் ஒன்றிய அரசு தரு கிறது. முக்கால்வாசி நிதியை மாநில அரசுதான் கொடுக்கிறது. அப்படியென் றால் இது முதலமைச்சர் வீடு கட்டும் திட்டம்தானே. அதற்கு பிரதமர் வீடு கட் டும் திட்டம் என்று ஸ்டிக்கர் ஒட்டியது யார்? பிரதமர் படம் இல்லாத இடமே கிடையாது. அடையாள அட்டைகளில் நம் படம் இருக்கிறதோ இல்லையோ பிர தமர் படம் இருக்கும். இப்படி ஸ்டிக்கர் ஒட்டும் பழக்கம் இருப்பது யாருக்கு?” எனக் கேள்வி எழுப்பினார்.