தூத்துக்குடி, டிச. 20 - தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர், 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த அதி கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணை யக் குழு ஆலோசகர் கே.பி.சிங் தலை மையில், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை விஜயகுமார், ஜல் சக்தி அமைச் சகத்தின் ஆர். தங்கமணி, ஹைதராபாத்தி லுள்ள மத்திய வேளாண் இயக்குநர் முனை வர் கே.பொன்னுசாமி ஆகியோர் இந்த 6 பேர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இவர்கள், முதலாவது, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், புதனன்று (20.12.2023) காலை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாநக ராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி யில் உள்ள நடராஜா நகர், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை படகு மூலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே, நகராட்சி நிர்வாக கூடு தல் ஆணையர் பிரகாஷ் செய்தியாளர் களை சந்தித்தார். அவர்,”ஆய்வின்படி தெரிய வந்த பல்வேறு சேதாரங்கள், குறிப் பாக, பயிர்ச்சேத பாதிப்பு, மீனவ படகு களுக்கு ஏற்பட்டுள்ள சேதாரம், உயிர்ப் பலி எல்லாவற்றையும் கணக்கிட்டு ஒரு அறிக்கையாக தயாரித்து, அதனடிப்ப டையில் இழப்பீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மத்திய ஆய்வுக்குழு, வியாழனன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறது.