districts

img

கச்சத்தீவு விவகாரத்தில் கடும் எதிர்ப்பை பதிவு செய்தவர் கலைஞர்

தூத்துக்குடி, ஏப். 3 இந்தியா கூட்டணி சார் பில் தூத்துக்குடி நாடாளு மன்ற தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் கனி மொழி கருணாநிதி அவர் களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தூத்துக் குடி மாவட்டம் கோவில்பட்டி யில் செவ்வாய்க்கிழமை மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகர செய லாளர் கே.சீனிவாசன், தலை மை வகித்தார்.

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய லாளர் கே.பி.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் கோவில்பட்டி தெய்வேந்தி ரன், கயத்தாறு சாலமன், எட்டையபுரம் ஜீவ ராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர் பொன்னுச்சாமி பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் பரமராஜ்,  மதிமுக சார்பில் மத்திய நகர  செயலாளர் சரவணன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் கயத்தாறு அஸ்மத், திமுக கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, மக்கள் நீதி மய்யம் தொகுதி பொறுப்பாளர் ரமேஷ், சிபிஎம் சார்பில் நகர்மன்ற உறுப்பினர் எல்.பி.ஜோதி பாசு, விஜயலட்சுமி, கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

இதில் சிபிஎம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின ரான  மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் சிறப்புரையாற்றி னார். சிபிஎம் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அர்ச்சுனன், ஆர்.ரசல், தா.ராஜா, ஆர்.பேச்சி முத்து, எஸ்.அப்பா துரை, சண்முக ராஜ், புவிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், டி.கே.ரங்க ராஜன் பேசுகையில், “கடந்த  10 ஆண்டு கால பாஜக ஆட்சியை நாம் துடைத்து எறிய வேண்டும். தற்போது வடமாநிலங்களிலும் பாஜகவுக்கு சரிவு தொடங்கி யுள்ளது.

பாஜகவின் வெற்றி கடந்த காலத்தை விட குறைந்துள்ளது. இந்தியா கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.  இந்தியாவில் ஜன நாயகத்துக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் குரல் கொடுத்த கட்சிகள் திமுக வும்  முன்னாள் முதல்வர்  கலைஞரும் கம்யூனிஸ்ட்டு களும்தான். இந்தத் தேர்தல் ஜனநாய  கத்தை பாதுகாக்க வேண்டுமா? வேண்டாமா? என முடிவு செய்யக்கூடிய தேர்தல்.  மத்தியில் ஆளும்  பாஜக ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறது. இதனை பாஜகவில் உள்ள வர்களும் யோசிக்க வேண்டும்.

இந்த நாட்டின்  ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வருவது, நாட்டு மக்களின் உரிமைகளை முற்றிலுமாக அழிப்பதாகும்.  பாஜக என்பது ஒரு பாசிச இயக்கத்தின் அரசியல் பிரிவு தான். அது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போன்று ஒரு கட்சியே அல்ல. இந்தியா வில் உள்ள அனைத்து இயக்கங்களை அழிப்பதன் மூலமாக ஒரு கட்சி ஆட்சியை  கொண்டு வருவது, ஒரு நாடு ஒரு மதம் என்ற ஆட்சியை  கொண்டு வருவது என இவற்றை நோக்கி செல் கிறது. இதற்குப் பின்னணி யாக இருப்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தத்துவம். அவர்கள் இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்டது கிடையாது.

மத ரீதியாக இந்த நாட்டின் அர சியல் சட்டங்கள் இருக்க  வேண்டும் என வாதிட்ட வர்கள். ஆணாதிக்கம் நிறைந்த தத்துவம் தான் ஆர்எஸ்எஸ். ஏற்கனவே மாநிலங்களின் அதி காரங்கள் குறைக்கப்பட்டுள் ளது. இதனை மக்கள் பரிசீலிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் மோடி நினைத்து இருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்க முடியாதா?. அரசு அதிகாரியாக இருந்து தற்போது வெளியுற வுத்துறை அமைச்சராக உள்ளவர் கச்சத்தீவை திமுக தாரை வார்த்துவிட்டது என்கிறார். கச்சத்தீவு விவ காரத்தில் அப்போதே திமுக தலைவா் கருணாநிதி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் என்பது ஆவ ணங்களில் உள்ளது.  அப்போது மக்களவையில் இந்த விவகாரம் குறித்து திமுக உறுப்பினா் இரா.செழியன் கண்டித்து பேசி உள்ளார். எதிர்ப்பை பதிவு  செய்த மற்றொரு உறுப்பி னர் விஐடி விஸ்வநாதன்.  இவ்வாறு அவர் பேசி னார்.