districts

அதிமுக சின்னம் அடங்கிய மாதிரி வாக்குப்பதிவு அட்டவணையுடன் வந்த பூத் ஏஜெண்ட்

தூத்துக்குடி,ஏப்.19-  தூத்துக்குடி போல்பேட்டை வாக்குச்சாவடியில் அதிமுக பூத் ஏஜெண்ட் கொண்டுவந்த அதிமுக வேட்பாளரின் சின்னம் அடங்கிய மாதிரி வாக்குப்பதிவு அட்டவணை மேயர் ஜெகனின் தலையீட்டால் அதிகாரிகள் அகற்றினர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெற்றது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போல்பேட்டை பகுதியில் உள்ள தங்கம்மாள்புரம் நினைவு மேல்நிலைப் பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி தனது வாக்கினை பதிவு செய்ய வந்திருந்தார். அப்போது, அதிமுக வேட்பாளரின் பூத் ஏஜென்ட் ஒருவர் அதிமுக வேட்பாளரின் முகம் மற்றும் சின்னம் அடங்கிய மாதிரி வாக்குப்பதிவு அட்டவணையை வைத்திருந்துள்ளார்.

இதனைக் கண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, உடனடி யாக தேர்தல் பணிகளில் இருந்த அதிகாரிகளிடம் கூறி.  அதை அப்புறப்படுத்துமாறு கூறினார். அதன் பின்னர் தேர்தல் அதிகாரி, பூத் ஏஜென்ட் வைத்திருந்த மாதிரி வாக்குப்பதிவு அட்டவணையை கைப்பற்றி அப்புறப்படுத்தினர்.

;