districts

img

தூத்துக்குடி மாவட்டத்தில் சிபிஎம் வழங்கிய

தூத்துக்குடி,  ஜன.4-  தூத்துக்குடி மாவட்டத்தில் மழை-வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, வர்க்க, வெகுஜன அரங்கங்கள் மற்றும் நடுத்தர அரங்கங்கள் சார்பில் வழங்கப் பட்ட நிவாரணப் பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18 தேதிகளில் பெய்த அதிகனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தூத்துக்குடி மாநகர், தூத்துக்குடி ஒன்றியம், திருச்செந்தூர், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம், உடன்குடி ஆகிய ஒன்றியங்களில் வீடுகள், வயல்களில் வெள்ள நீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும்; உணவு, தங்கும் இடம், தண்ணீர் இன்றியும் பெரும் சிர‌மத்திற்கு ஆளானார்கள். 

இந்த நிலையில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிசம்பர் 19 முதல் மீட்பு பணி; உணவு, உடை,  குடிதண்ணீர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ஜனவரி 2 வரை 15 நாட்களாக வழங்கப்பட்டு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 43ஆவது வார்டு, 44ஆவது வார்டு, 17ஆவது வார்டு, தபால் தந்தி காலனி, ராஜீவ் நகர், மாசிலாமணிபுரம், திம்மையார் காலனி மற்றும் தூத்துக்குடி புறநகர் பகுதிகளான 53ஆவது வார்டு, கோவளம் மீனவர் காலனி, சண்முகபுரம், எம்.ஜி.ஆர் நகர், சுந்தர் நகர், கக்கன்ஜி நகர், முள்ளக்காடு, சுனாமி காலனி, சூசை நகர், அகரம், மஞ்சள்நீர்காயல்;

தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளான தாளமுத்துநகர், சோரீஸ்புரம், கோவில்பிள்ளைவிளை, ஜோதிபாசு நகர், புதுக்கோட்டை;  திருவைகுண்டம் ஒன்றிய பகுதிகளான திருவைகுண்டம், காமராஜநல்லூர், ஆலடியூர், இந்திரா நகர், கணியான் காலனி, கே.டி.சி நகர், மேலக்கோட்டை வாசல் , ஜெயராம சந்திராபுரம், அதிசயபுரம், அரிபுரம், பராக்கிரம பாண்டி, முக்காணி, குருவித்துறை, மாங்கொட்டா ரம், செதுக்குவாய்ந்தான், சொக்கப்பழங்கரை, சம்படி, மாரமங்களம்; கருங்குளம் ஒன்றிய பகுதிகளான திருச்செந்தூர்பட்டி, ஆராபத் நகர், பக்கபட்டி, முத்தாரம்மாள்புரம், பொட்டலூரணி, செய்துங்கநல்லூர்; ஆழ்வார்திருநகரி ஒன்றிய பகுதிகளான ஆழ்வார்திருநகரி, இரத்தினபுரி, தேமாங்குளம், செங்குளம், நொச்சிகுளம், ஆத்தூர், ஆத்தங்கரை, கீரனூர், தலைவன்வடலி, புன்னக்காயல்; திருச்செந்தூர் ஒன்றிய பகுதிகளான திருச்செந்தூர், காயல்பட்டினம், தோப்பூர்; உடன்குடி ஒன்றிய பகுதிகளான உடன்குடி, மாணிக்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில்  இதுவரை 10 ஆயிரத்து 602 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, 10 ஆயிரத்து 133 குடும்பங் களுக்கு தலா 850 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள், 2 ஆயிரத்து 895 குடும்பங் களுக்கு போர்வை, கைலி, குழந்தைகளுக்கான ஆடை, 564 குடும்பங்களுக்கு சேலைகள், வழங்கப் பட்டுள்ளன. நான்கு நாட்களில் 23 ஆயிரத்து 960 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

மொத்தம் 11 ஆயிரத்து 207 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் 1 கோடியே 24 ஆயிரத்து 700 ரூபாய்க்கு வழங்கப்பட்டது .

இவ்வாறு அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.