தூத்துக்குடி,ஏப்.18- தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சலவைத் துறையை அபகரிக்க முயற்சி நடப்பதாக ஆட்சியரிடம் தொழிலாளர்கள் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாநகர சலவை தொழி லாளர் நலச் சங்கம் சார்பில் சலவை தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் உள்ள சலவைத் துறையில் கடந்த 3 தலைமுறைகளாக தொழில் செய்து வருகிறோம். கடந்த 1955ஆம் ஆண்டு 9.45 ஏக்கர் நிலம்எங்களுக்கு அளிக்கப்பட்டு சலவைத்துறை அமைக்கப்பட்டது. இதனை நாங்களே பராமரித்து காலங்கலமாக பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சலவைத் துறையை நவீனபடுத்தி தருகி றோம் என்று கூறினார்கள். ஆனால் வணிக வளாகம், பூங்கா, நடைபாதை பணிகள் நடைபெற்று, சலவைத் துறையை எங்களுக்கு அளிக்காமல் அந்த இடத்தில் கட்டப்பட்ட வணிக வளாகங்கள் டெண்டர் விடப்படு வதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே அரசு அலுவலக குடியிருப்பு, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பெரும் பகுதி நிலத்தை அரசு எடுத்துக் கொண்டது. தற்போது சலவைத் துறையும் பறி போகும் சூழ்நிலை உள்ளது. எனவே, சலவைத் துறை யையும் அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளையும் மீண்டும் சலவைத் தொழிலாளர்களுக்கே வழங்கவும், அந்த இடத்திற்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.