தூத்துக்குடி, ஜன. 12 தூத்துக்குடி மாவட்டத்தில் அதி கனமழை வெள்ளப் பாதிப்புக்களை, கடந்த டிசம்பர் 20, 21 தேதிகளில் ஒன்றியக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து 2-ஆவது முறையாக வெள்ளிக்கிழமையன்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோ சகர் கே.பி.சிங் தலைமையில் 7 பேர் கொண்ட ஒன்றியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவைகுண்டம் வட்டத்திற்கு உட்பட்ட முறப்பநாட்டில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக- விருதுநகர் மாவட்டம் காரியா பட்டி, திருச்சுழி, விருதுநகர் பகுதிகள் உட்பட அந்தப் பகுதியில் உள்ள 637 கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் கூட்டு குடிநீர் திட்டம் சேதமடைந்த பகுதிகள், திருவைகுண்டம் அரசு மருத்துவமனை, பேரூர் சாலைகள், வயல்வெளிகள், பொன்னன் குறிச்சி பகுதியில் சேதமடைந்த வீடுகள், மின்வாரிய அலுவலகம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். முன்னதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஒன்றியக்குழு வினர் ஆலோசனை மேற்கொண்டனர்.