districts

img

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டவர் யார்?

தூத்துக்குடி, மார்ச் 27- தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜகவிடம் அடகுவைத்த- தூத்  துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்  கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை ஈரவிரக்கமற்ற வகையில் சுட்டுக் கொன்ற எடப்பாடி பழனி சாமிக்கு, மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டு வார்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டா லின் கூறியுள்ளார்.

தூத்துக்குடி தொகுதி திமுக  வேட்பாளர் கனிமொழி கருணாநிதி,  இராமநாதபுரம் தொகுதி முஸ்லிம்  லீக் நவாஸ் கனி ஆகியோருக்கு வாக்கு சேகரித்து, திமுக தலைவ ரும் தமிழக முதல்வருமான மு.க.  ஸ்டாலின் செவ்வாயன்று தூத்துக் குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பரப்  புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில்  ஒரு கரும்புள்ளி 
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், தூத்துக்குடி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது எது? துப்  பாக்கிச் சூடு! 13 பேர் அநியாயமா கக் கொல்லப்பட்டதை மறக்க முடி யுமா? அப்படியொரு மனிதநேய மற்ற கொடூரமான துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்தான் பழனி சாமி! தமிழ்நாட்டு வரலாற்றில் அதி முக ஆட்சியால் வைக்கப்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளி. துயர மும் - கொடூரமுமான அந்த சம்ப வத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் பதறுகிறது.

2018-ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான் உடனடி யாகத் தூத்துக்குடிக்கு வந்தேன். துப்பாக்கிச் சூட்டின் சத்தமும் –  மக்களின் மரண ஓலமும் ஒலித் துக் கொண்டிருந்த அந்தக் காட்சி,  இப்போதும் என் மனதை விட்டு அகலவில்லை. இரத்தத்தை உறைய வைக்கும் இந்தச் சம்ப வம் பற்றி அன்றைய முதலமைச்சர்  பழனிசாமியிடம் ஊடகங்கள் கேட்ட போது, என்ன கூறினார்? “இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியாது. உங்களைப்போல் நானும் டி.வி. பார்த்துதான் தெரிந்துக் கொண்டேன்” என்று  துளிகூட நெஞ்சில் ஈரம் இல்லாமல்  பழனிசாமி பேட்டி அளித்ததை யாரும் மறந்திருக்கவே முடியாது.

பழனிசாமியின் பொய்யை அம்பலப்படுத்திய ஆணையம்
”உள்துறையைக் கையில் வைத்திருந்த மாநிலத்தின் முதல மைச்சர் பேசும் பேச்சா அது?” என்று  நாடே கோபத்தில் கொந்தளித்தது. அந்தளவுக்குப் பெரிய பொய்யை  கூறினார் பழனிசாமி. ஒரு பழமொழி  கூறுவார்கள்… ‘கடப்பாரையை முழுங்கிவிட்டு - கசாயம் குடித்து  விடுவார்கள்’ என்று! அந்தள விற்குப் பெரிய பொய்யைப் பழனி சாமி அன்று கூறினார். அவர் கூறி யது எவ்வளவு பெரிய பொய் என்று அவர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே கூறி விட்டது. நீதியரசர் அருணா ஜெக தீசன் ஆணைய அறிக்கையில் பழனிசாமி கூறியது பொய் என்று தெளிவாக வந்துவிட்டது.

எடப்பாடிக்குத் தெரிந்தே நடந்த துப்பாக்கிச்சூடு
‘பச்சைப்பொய் பழனிசாமி’ என்று மக்கள் சும்மாவா சொன்னார்  கள்! பழனிசாமிக்குத் தெரிந்துதான் துப்பாக்கிச் சூடு நடந்தது என்று ஆணையம் ஆதாரப்பூர்வமாக கூறியிருக்கிறது. ஆணையத்தில் சாட்சியாக விசாரிக்கப்பட்டவர்கள் யார் தெரியுமா? அப்போது இருந்த  தலைமைச் செயலாளர்! அடுத்து, சட்டம்-ஒழுங்கு பொறுப்பிலிருந்த அப்போதைய டி.ஜி.பி.! அன்றாட நிகழ்வுகளை முதலமைச்சருக்கு சொல்லும் அப்போதைய உளவுத் துறை ஐ.ஜி.! இப்படி அரசின் உயர் பொறுப்புகளில் இருந்த அனைவரும் கூறிய சாட்சியத்தை வைத்துத்தான், பழனிசாமிக்கு தெரிந்துதான் துப்பாக்கிச் சூடு  நடந்திருக்கிறது என்று ஆணையம்  உறுதி செய்தது!

தூத்துக்குடியில் நடக்கின்ற சம்பவங்களையும், அங்குள்ள நில வரங்களையும் நிமிடத்திற்கு நிமி டம் எடப்பாடி பழனிசாமியிடம் அப்  டேட் செய்ததாக அவர்கள் கூறி னார்கள். எனவே, ஊடகங்கள் மூல மாகத்தான் துப்பாக்கிச் சூடு சம்ப வம் பற்றி தெரிந்து கொண்டதாகப் பழனிசாமி கூறியது தவறானது என்று ஆணையத்தின் அறிக்கை யில் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.

பாதிக்கப்பட்ட அனைவருக் கும் திமுக ஆட்சியில்தான் நிவா ரணம் வழங்கினோம்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினோம்
எல்லாவற்றிற்கும் மேல், இந்தத்  துயரங்களுக்கு எல்லாம் காரண மான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாகத் திறக்க முடியாதபடி சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் உறு தியான வாதங்களை முன்வைத்து வெற்றி கண்டது, நம்முடைய அரசு தான்!

ஒரு ஆட்சி நிர்வாகம் ஈவு  இரக்கமில்லாமல் எப்படி நடக்கக்  கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு கடந்த அ.தி.மு.க. ஆட்சி! ஆனால்,  பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கண்ணீரைத் துடைத்து, அவர் களின் வாழ்க்கையில், ஒளி வீசும் உதயசூரியனாக இருக்கிறதுதான் நம்முடைய தி.மு.க. ஆட்சி!

பழனிசாமி அவர்களே… களத்தில் மோதுவோம்! எங்கள் சாதனைகளையும் - உங்கள் துரோகங்களையும் எடைபோட்டு மக்கள் தீர்ப்பளிக்கட்டும்! எங்கள் கொள்கைகள் எப்படி உயர்வானது! அந்தக் கொள்கைகளுக்காக நாங்கள் எப்படி உறுதியுடன் நிற்கிறோம்! கொள்கை அடிப்படையில் ஆட்சி நடத்தி, திட்டங்களைச் செயல்படுத்துகிறோம் என்று ஒவ்வொரு நாளும் மக்கள் பார்க்கிறார்கள்…

அதேபோல், பழனிசாமி என்பவர் யார்? நேற்று யாருடன் இருந்தார்; இன்றைக்கு யாருடன் இருக்கிறார்; நாளைக்கு யாருடன் இருப்பார்; சுயநலத்தின் முழு உருவமாகத் தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படி அடகு வைத்தார்; நேரத்திற்கு ஏற்ற மாதிரி எப்படியெல்லாம் தவழ்ந்து… தவழ்ந்து பழனிசாமி போராடுவார் என்று மக்கள் எடைபோட்டுத் தீர்ப்பளிப்பார்கள்!