தூத்துக்குடி, ஜன.12 மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங் கும் தூத்துக்குடி வித்ய பிர காசம் சிறப்புப் பள்ளியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தூத் துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் மற்றும் செய்தி யாளர்களுடன் சென்று பார்வையிட்டார். சிறப்பு பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறை, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பயிற்சி கள் ஆகியவற்றை வியாழ னன்று ஆய்வு செய்தார். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரும் பள்ளி வாக னத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி மேயர் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோர் மாற்றுத்திற னாளி குழந்தைகளுடன் பய ணித்தனர். மேலும், பள்ளி யின் அருகில் இயங்கி வரும் முத்தம்மாள்புரம் ஊர்ப்புற நூலகத்தில் உள்ள புத்தகங் கள் மற்றும் வாசகர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிக ளை பார்வையிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி வித்ய பிரகா சம் மனவளர்ச்சி குன்றிய வர்களுக்கான சிறப்புப் பள்ளியில் பயிலும் 15 குழந்தைகளை தேர்ந்தெ டுத்து அவர்களுக்கு சிறு தொழில்கள் செய்வதற்கான பயிற்சி அளித்து அவர்கள் தொழில் செய்து சுயமாக சம் பாதிக்க வழிவகை செய்யப் படும். குறிப்பாக பாக்கு மட்டை மூலம் தட்டுகள் தயா ரிக்கும் பயிற்சி அளித்து வங்கிக்கடன் மூலம் தொழில் மையத்தை ஏற்படுத்தி வரு மானம் பெறுவதற்கு நடவ டிக்கை எடுக்க ப்படும்.
இப்பள்ளியில் ஆட்டிசம் குழந் தைகளுக்கு தனியாக கட் டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். மேலும் வாகன ஓட்டுநர், உதவியா ளர், தூய்மைக்காவலர் என 3 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இப்பள்ளி வாகனம் மூலம் குழந்தைகளை வீட்டில் இருந்து அழைத்து வருவதற்கு மிகவும் உதவி கரமாக இருப்பார்கள். முதல் மாநகராட்சி வெற்றியின் பயணம் முடி வதில்லை. நாம் தொடர்ந்து பயனித்து கொண்டிருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். மாற்றுத்திறனா ளிகள் நிறைய சாதிக்க வேண்டும். மாற்றுத்திறனா ளிகளுக்கு சிறந்த எதிர்கா லம் இருக்கிறது. அதற்கா கத்தான் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டின்கீழ் வைத் துள்ளார். தமிழ்நாட்டிலேயே முதல் மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சி யில்தான் மாற்றுத்திறனாளி கள் சக்கர நாற்காலி மூலம் கடற்கரைக்கு சென்று கால் களை நனைத்து கொள்வ தற்கு ஏற்பாடுகள் செய்து தமிழ்நாட்டிற்கே முன்னோடி யாக விளங்கியது. மாற்றுத் திறனாளிகள் வாழ்க்கையில் சாதிப்பதற்கு வாழ்த்துக் கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தூத்துக் குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் . சிவசங்கரன் மற்றும் சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர், சிறப்பு பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டனர்.