தூத்துக்குடி, ஏப்.11- தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனி மொழி, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு விஜ யாபுரி ஊராட்சியில் பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது அவர் பேசி யதாவது: “இந்த தேர்தலில் நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண் டும். ஆளக்கூடிய பாஜக அரசு தொடர்ந்து, பெண்களை இழிவு செய்யக்கூடிய, பெண்களுக்கு எதி ரான கருத்துக்களைப் பேசிக் கொண் டிருக்கிறார்கள்.
அதுதான் அவர் களின் அடிப்படை கொள்கையாக இருக்கிறது. ஆனால், நாங்கள் தான் நாடாளுமன்றத்தில் பெண் களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம் என்று சொல்வார்கள். ஆனால், அது எப்போது வரும் என் றால், 10 வருஷம், 20 வருஷம், 30 வருஷம் கூட ஆகலாம், அது யாருக் கும் தெரியாது. ஆனால், பேருக்கு வெறும் சட் டம் மட்டும் கொண்டு வந்துள்ள னர். பெண் சக்தி என்று பிரதமர் பேசு வார், பாஜகவில் இருக்கக்கூடிய 44 எம்.பி.க்கள் பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் செய்தவர்கள்.
அவர்களின் மேல் எந்த நடவடிக்கை யும் இல்லை. இந்தியாவுக்காக பதக்கம் வென்ற வீராங்கனைகள், அவர்களோடு பிரிஜ் பூஷண் எம்.பி. தவறாக நடந்து கொண்டதாக வீராங்கனை போராடினார்கள். ஆனால், நடவடிக்கை எடுத்தது அந்த பெண் வீராங்கனைகள் மீது. ஆனால், அந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மேல் பிரதமர், பாஜக அரசு எந்த கேள்வியும் கேட்கவில்லை. மணிப்பூரில் எத்தனை பெண் களுடைய சுயமரியாதை அங்கே கேள்விக்குறியானது? எத்தனை பெண்கள் அவமானப்படுத்தப்பட் டார்கள்.
ஒரு நாளாவது பிரதமர் மோடி அங்கே போய், அந்த பெண் களிடம் நான் இருக்கிறேன், உங்க ளுக்கு பாதுகாப்பாக என்று சொல்லி இருக்கிறாரா, இல்லை. சாமானிய மக்களுக்கு இந்த பாஜக அரசாங் கம் எதுவும் செய்யாது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட் டும் உழைக்கக்கூடிய ஒரு ஆட்சி”. இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.