districts

நெல்லுக்கு ரூ. 30 ஆயிரம், வாழைக்கு ரூ. 50 ஆயிரம்..

தூத்துக்குடி, டிச. 20 - மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாநகர் பகுதிகளான லோகியா நகர், மாசிலாமணி புரம், பாளை யங்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதி களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம் தலைமையில் கட்சியினர் நேரில் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி  மாநகராட்சி 43-ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாமினையும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்ட னர். மாநகர் செயலாளர் தா. ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்பாதுரை, புவிராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், எம்.எஸ். முத்து, சிபிஎம் மாமன்ற உறுப்பினர் முத்து மாரி, மாநகர்க்குழு உறுப்பினர் ஆறு முகம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

இந்த ஆய்வைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி மாநகர், புறநகர், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம், காயல் பட்டினம், திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, மாசிலாமணிபுரம், ராஜிவ் நகர்,  தாளமுத்து நகர், முத்தையா புரம், ஸ்பிக்  நகர், சுந்தர் நகர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த கனமழை காரணமாகவும் தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளான கோரம்பள்ளம், காலங்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் ஏற்பட்ட உடைப்பு காரணமாகவும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

இந்நிலையில், தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு பகுதிகள் நீரிணை கடலில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்து உணவு வழங்கி வருகிறது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக மழை  நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மக்களுக்கு  உரிய நிவாரணம் என்பது கிடைக்க வில்லை. பெரும்பான்மையான பகுதி களில் பொதுமக்கள் தங்கள் உடமைகள், பொருட்களை இழந்து உணவு கிடைக்கா மல் தவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் பகுதி களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மாநகரில் பல்வேறு பகுதி களில் மின்சாரம் என்பது வழங்கப்பட வில்லை, மின்சாரம் இல்லாமல் இரவு நேரங்களில் பொதுமக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். 

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கி யுள்ளது. தூத்துக்குடியைப் பொறுத்த வரை, மழை வெள்ளத்தால் மக்கள் தங்களின் வீட்டு உபயோகப் பொருட் களை இழந்துள்ளனர். வாகனங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன. எனவே, தமிழக அரசாங்கம் தூத்துக்குடி மக்களுக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், அதேபோல் திருவை குண்டம், கருங்குளம், ஆழ்வார் திருநகரி உள்ளிட்ட தாமிரபரணி நீர்வழி தடத்தை ஒட்டிய  பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழைகள் முற்றிலும் சேதம் ஏற்பட்டது. எட்டையபுரம், விளாத்திகுளம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிட்ட கம்பு, பாசி உள்ளிட்ட தானியங்கள் மழை காரணமாக சேதம் அடைந்துள்ளன. எனவே, சேதமடைந்துள்ள நெல், கம்பு, பாசி போன்றவற்றிற்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம், வாழைக்கு ஒரு ஏக்க ருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு கே.பி. ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.