districts

img

தூத்துக்குடியில் தூய்மைப்பணி : வாலிபர் - மாணவர்களுக்கு பாராட்டு விழா

வரலாறு காணாத அதிகனமழை-வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர்  தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி மாநகர பகுதி,  புல்வாவெலி, ஆத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, உமரிக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி,  சிறு தொண்டனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி,  கணேசபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,  அரசு மேல்நிலைப்பள்ளி, ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை  வாலிபர் சங்கத்தினர் சுத்தம் செய்தனர்.  இந்திய மாணவர் சங்கத்தினர் புனித மரியன்னை ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, சி.வ அரசு பள்ளி, சோரீஸ்புரம் அரசு பள்ளி ஆகியவற்றை சுத்தம் செய்தனர். அர்ப்பணிப்போடு செயல்பட்ட  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் டிசம்பர் 31 அன்று பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு  கட்சியின் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தினரை பாராட்டிப் பேசினார்.    இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, பேச்சிமுத்து, சண்முகராஜ், புவிராஜ், புறநகர செயலாளர் ராஜா, வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாவட்ட தலைவர் தினேஷ், மாவட்ட செயலாளர்  சுரேஷ், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கிஷோர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.