சென்னை, டிச. 20 - தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள் ளன. தொடர்ந்து தென் மாவட்டங் களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரு கின்றன.
இந்நிலையில், சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல் பாட்டு மையத்திற்குச் சென்று புதனன்று (டிச. 20) ஆய்வுமேற்கொண்ட முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் மற்றும் நிவார ணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு முதலமைச்சருக்கு விளக்கம் அளித்தனர்.
மேலும், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களு டனும், வருவாய் நிர்வாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழ கத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி ஆகி யோருடன் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து காணொலி வாயி லாக ஆலோசனை மேற்கொண்ட முதல்வர், முன்னதாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிலையை கேட்டறிந்து உரிய அறிவுரைகளை வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு
தூத்துக்குடியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், புதன்கிழமையன்று வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்வார் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், அதேநாளில் மத்தியக்குழுவும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அவர்களு டன் மாவட்ட நிர்வாகம் உடனிருக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில்கொண்டு, புதன்கிழமை இரவு மதுரை செல்லும் முதல்வர், வியாழக்கிழமை (டிச.21) தூத்துக்குடி யில் ஆய்வு மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.