தூத்துக்குடி, பிப்.25- தென் தமிழ்நாட்டில் முதல் மின் வாகனத் தொழிற்சாலைக்கு தூத் துக்குடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி மாவட்டம், சிப்காட்-சில்லாநத்தம் தொழிற்பூங்காவில், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின் பாஸ்ட் ஆட்டோ நிறுவனத்தின் மின் வாகனங்களை தயாரிக்கும் தொழிற் சாலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 25 ஞாயிறன்று அடிக்கல் நாட்டி,பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த ஆலை, முதற்கட்ட மாக 4000 கோடி ரூபாய் முதலீட்டில் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒருங்கி ணைந்த மின்வாகன ஆலையாக அமைக்கப்படவுள்ளது. கடந்த மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ நடத்தப் பட்டது.
அந்த மாநாட்டில் 6,64,180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உறுதி செய்திடும் வகையில், உலகளாவிய முன்னணி தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களு டன், 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொரு ளாதார இலக்கினை அடைவதற் கான தொலைநோக்கு ஆவணத்தை யும் முதலமைச்சர் வெளியிட்டார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட் டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்ட 50 நாட்களுக்குள் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. தென் தமிழ்நாட்டில் வாகன உற்பத்திக் கான முதலாவது பெரிய முதலீடு ஆகும். இத்திட்டத்தின் மூலம், “இந்தி யாவின் ஆட்டோ ஹப்” மற்றும் “இந்தியாவின் மீன் வாகனத் (EV) தலைநகரம்” ஆக விளங்கும் தமிழ் நாட்டின் நிலையை மேலும் வலுப் படுத்தும் எனக் கூறப்படுகிறது.
‘வின் பாஸ்ட்’ மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள வின்பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறு வனம் , 7 வகையான மின் சீருந்து களையும், 5 வகையான மின் ஸ்கூட் டர்களையும், 2 வகையான மின் பேருந்துகளையும் தயாரித்து வரு கின்றது. இந்நிறுவனம். உலக முத லீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட் டில் மின் வாகன உற்பத்தியில் நீண்ட கால முதலீடாக 2 பில்லியன் அமெ ரிக்க டாலர்கள் (ரூ.16,000 கோடி) முத லீடு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப் பந்தம் மேற்கொண்டது. தூத்துக்குடியில் அமையும் இந்த தொழிற்சாலை, ஆண்டொன்றுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் வாகன உற் பத்தி திறன் கொண்டதாக அமைய வுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தமிழக அமைச் சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு, பி. கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ் ணன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், த. மனோ தங்கராஜ், டி.ஆர்.பி. ராஜா, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் சி.சண்முகையா, ஜி.வி. மார்க்கண்டேயன், ஊர்வசி செ. அமிர்தராஜ், தூத்துக்குடி மாநக ராட்சி மேயர் பெ. ஜெகன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்த கத் துறைச் செயலாளர் வி. அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலா ண்மை இயக்குநர் - தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, சிப்காட் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே. செந்தில்ராஜ், தூத்துக் குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி, வின்பாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் பாம் சான்ஹ் சௌ, துணை தலைமைச் செயல் அலுவலர் கள் ஹோங் காங் தாங், நுகென் டாங் குவாங் மற்றும் அரசு உயர் அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.