districts

திருவாரூர் வந்த வாலிபர் சங்க சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

திருவாரூர், ஏப்.26 - ‘இளைஞர்களுக்கு வேலை கொடு’ என்ற  முழக்கத்தோடு தமிழகத்தின் நான்கு முனை களிலிருந்து புறப்பட்டு திருச்சியில் சங்க மிக்கிற வாலிபர் சங்கத்தின் சைக்கிள் பேரணி  திங்கள்கிழமை திருவாரூர் மாவட்ட எல்லை யான குமாரமங்கலத்தை வந்தடைந்தது. வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.எம்.சலாவுதீன் தலைமையில் அதிர்வேட்டு, வாணவேடிக்கை, மின்விளக்கு அலங்காரம் என பிரம்மாண்ட ஏற்பாடுகளோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொல்லுமாங்குடி கடை வீதியில்  பேரணியில் பங்குபெற்ற தோழர்களுக்கு சிபிஎம் நன்னிலம் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.  பேரளம், பூந்தோட்டம், சன்னாநல்லூர் என முக்கிய கடைவீதிகளில் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எஸ்.சுரேந்தர், தலைவர்  பி.ஜெயசீலன், பொருளாளர் கே.எம்.பாலா ஆகி யோர் ஏற்பாட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

;