திருவாரூர், பிப்.16 - பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த விவசாயி களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயி கள் நடத்திய கடும் போராட்டத்தினால் அந்த சட்டங்கள் திரும்ப பெறப்பட் டன. தமிழக சட்டமன்றத்தில் இச்சட்டங் களை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றியது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. அந்த சட்டங்களை ஆத ரித்து பேசியது கடந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு. காவிரி டெல்டா மாவட்ட விவ சாயிகளையும், மக்களையும் பாதுகாக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் புதன் கிழமை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டு காலமாக நாட்டையும், மக்களையும் தமிழக மக்களின் வாழ்வையும் பாதுகாத்திட வும், மாநில உரிமைகளை தொடர்ந்து பாதுகாத்திடவும், சிறுபான்மை மக்களை அச்சுறுத்தலில் இருந்து காத்திடவும் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது.
சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக நிறைவேற்றி வரு கிறார். நரேந்திரமோடி அரசின் பார பட்ச அணுகுமுறையை எதிர்கொள் ளும் அதே நேரத்தில், மாநில ஆளு நரின் எதேச்சதிகார போக்கை கண்டிப்பதோடு, சமூக நீதியை பாது காத்திட அகில இந்திய அளவில் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த பின்னணியில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக போட்டி யிடுவதாக வேடமிட்டு மக்களை ஏமாற்றுகின்றன. இவற்றை உணர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இக்கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் எம்.ஜெயபிரகாஷ் (வார்டு 24), கே.ஜி.ஆர்.ராமலோக ஈஸ்வரி (வார்டு 11), பேரூராட்சிகளில் வேட்பா ளர்களாக பேரளத்தில் சித்ரா மனோ கரன் (வார்டு 1), ஆர்.ராஜா (வார்டு 12) குடவாசலில் ஆர்.லெட்சுமி (வார்டு 2) ஆர்.அமுதா (வார்டு 15), வலங்கை மானில் வி.சேகர் (வார்டு 15), நீடா மங்கலத்தில் ஆனந்தமேரி ராபர்ட் பிரைஸ் (வார்டு 15) ஆகிய 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு அரிவாள், சுத்தி யல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்க ளிக்க வேண்டுகிறோம். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களும் 100 சதவீதம் வெற்றி பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பில் வாழ்த்துக்களையும் தெரி வித்துக் கொள்கிறோம்.