districts

img

கட்டிட மேஸ்திரிக்கு சிறந்த பெண்மணிக்கான விருது வழங்கல்

குடவாசல், மார்ச் 12 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அம்மையப்பனில் அமைந்துள்ள பாரத் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  திருவாரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பாரத் கல்வியியல் கல்லூரி இணைந்து நடத்திய விழாவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான நீதியரசர் எஸ்.சரண்யா தலைமை வகித்தார். அரசு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர் (ஓய்வு) ஜி.தேன்மொழி மற்றும் வழக்கறிஞர் எஸ்.சிவராஜ் மகளிருக்கான சட்டம் பற்றி விழிப்புணர்வு உரையாற்றினர். முன்னதாக பாரத் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.காலைக்கதிரவன் பரிந்துரையின்படி ‘சிறந்த பெண்மணிக்கான விருதை’ கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வரும் மேஸ்திரி வாசுகிக்கு நீதியரசர் எஸ்.சரண்யா வழங்கினார்.