districts

தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவாரூர், செப்.14- சமூக நீதிக்காக பாடு படுவர்களை சிறப்பு செய்வ தற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறு வோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு  சவரன் தங்கப் பதக்கமும்,  தகுதியுரையும் வழங்கப் பட்டு வருகிறது. இவ்விருதாளர் தமிழக முதல்வரால் தேர்வு செய்யப் படுகிறார். 2022 ஆம் ஆண்டிற் கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்கு வதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடு பட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப் பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாத னைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட  ஆட்சியரிடம் சமர்ப்பிக்க லாம். சமர்ப்பிக்கப்படும் விண் ்ணப்பம் விண்ணப்பதாரரின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ள டக்கியதாக இருத்தல்  வேண்டும். விண்ணப்பங் களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 31.10. 2022-க்குள் அனுப்பி வைக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

;