districts

சாதி-மத மோதலைத் தூண்டிவிட பாஜக முயற்சி: திருமாவளவன் புகார்

திருவாரூர், பிப்.7- திருவாரூரை அடுத்துள்ள அம்மை யப்பன் அக்கரை நடுத்தெரு செயலாளர் கவி யரசன் கடந்த ஜனவரி-31-ஆம் தேதி  கொலை செய்யப்பட்டார். இதற்குக் கண்  டனம் தெரிவித்தும் கொலைக்குற்றவாளி கள் அனைவரையும் கைது செய்ய வலி யுறுத்தியும் அக்கட்சி சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சித்  தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கவியரசன் கொலை அரசியல் படு கொலையாகும். இந்தச் சம்பவத்தில், மாவட்டக் காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு பத்துப் பேரைக் கைது செய் துள்ளனர். பாஜகவைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யாதது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் பாஜக சாதி-மத மோதல் களைத் தூண்டிவிட்டு திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்க முயல்கிறது இந்தக்  கொலையில் பாஜக உள்ளது வெளிப்படை.  பின்னணியில் சங்பரிவார் உள்ளது என்றார். மேலும், டெல்டா மாவட்டங்களில் கன மழை காரணமாகப் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். பாஜகவை வீழ்த்த சாதியவாத,மதவாத சக்திகளை எதிர்க்கும் அனைவரும் தமிழகத்தில் ஒன்றிணைய வேண்டும். குஜராத் முதல்வராக இருந்த இன் றைய பிரதமர் மோடி அன்றைக்குப் பிபிசி  ஊடகம் நம்பகமானது என்றார். நம்பகம் இல்லாத ஊடகம் என்கிறார். இவர் கூறு வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.