மன்னார்குடி, பிப்.3- திருவாரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உடன்பாடு திமுக, சிபிஎம் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி தெரிவித்துள்ளதாவது: திமுக - சிபிஎம் இடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருத்துறைப்பூண்டி நகர்மன்ற 11-வது, 24வது-வார்டுகளையும், பேரளம் பேரூராட்சியில் 1-வது, 12-வது வார்டுகளையும், குட வாசல் பேரூராட்சி தேர்தலில் 2-வது, 15வது வார்டுகளையும், வலங்கைமானில் 15வது வார்டையும், நீடாமங்கலம் பேரூ ராட்சியில் 15வது வார்டையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி க்கு ஒதுக்கியதன் அடிப்படை யில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மாவட்ட அலு வலகத்தில் நடைபெற்ற இதற் கான நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலை வாணனும், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தியும் உடன்பாட்டில் கையெழுத்திட்ட னர். இதில் மாநிலக்குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ்கலியபெருமாள், எம்.சேகர் கே.ஜி.ரகுராமன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.தம்புசாமி, டி.முருகையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்படி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் திருத் துறைபூண்டி நகராட்சி 11வது வார்டில் ராமலோக ஈஸ்வரியும், 24வது வார்டில் எம்.ஜெயப் பிரகாஷும், பேரளம் பேரூராட்சி 1வது வார்டில் சித்ராவும், 12 வது வார்ல் ராஜாவும், குடவாசல் பேரூராட்சி 2-வது வார்டில் ஆர்.லட்சுமியும், 15வது வார்டில் ஆர்.அமுதாவும், வலங்கைமான் 15வது வார்டில் சேகரும், நீடா மங்கலம் 15வது வார்டில் ஆனந்தி யும் பேரூராட்சி மன்ற உறுப்பி னர்களாக போட்டியிட கட்சி முடிவு செய்துள்ளது. 3.2.2022 மற்றும் 4.2.2022 இரண்டு நாட்களில் கட்சியின் வேட்பாளர்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான அணிக்கு முழுமையான வெற்றி வாய்ப்பி னை உருவாக்குவதற்கு இணைந்து பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.