திருவாரூர், ஜூன் 1 - சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமி ழன் வ.உ.சிதம்பரனாரின் நேரடி வாரிசுகள் செவ்வாய்க் கிழமை திருவாரூருக்கு வந்து, தமிழ்நாடு முதலமைச் சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். திருவாரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி யாளராக பணிபுரியும் சூ.நெல் லையப்பன் (60) வ.உ.சி யின் கொள்ளுப் பேரனாவார். இவரது குடும்பம் குறித்து விரிவான கட்டுரை மே 10 ஆம் தேதி தீக்கதிரில் வெளி யாகியிருந்தது. இந்தப் பின்னணியில் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து தனது மகளும் வ.உ.சி யின் எள்ளுப் பேத்தியுமான நெ.சாய்லெட் சுமிக்கு அரசு வேலை மற்றும் வசிப்பதற்கு வீடு, குடும்ப நிதியுதவி கேட்டு மனு அளித் தார். இவர்களது கோரிக் கையை பரிவுடன் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பரிசீலிப்பதாக உறுதி யளித்தார்.