திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட விஜயபுரம் பகுதியில் மாவட்ட பதிவாளர் (தணிக்கை) அலுவலகத்தினை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் திறந்து வைத்த நிகழ்ச்சியில், தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.