districts

img

மூத்த தோழர் தங்கவேல் படத்திறப்பு

குடவாசல், பிப்.18 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் தண்டலை கிராமத்தில் வசித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் தங்கவேல் கடந்த பிப்.2 ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக காலமா னார். மறைந்த தோழர் தங்கவேலுக்கு படத் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விழாவில்  கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி அன்னாரின் படத்தை திறந்து வைத்து  மலரஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன், மாவட்ட குழு உறுப்பினர் எப்.கெரக்கோ ரியா, மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி.ஜி.சேகர், டி.ஏ.சரவணன், 15 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் ஆர்.அமுதா, கிளை  செயலாளர் ரா.சுந்தரி உள்ளிட்டோர் வீர வணக்கம் செலுத்தினர்.