திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட நன்னிலம்-குடவாசல் சாலையில் காமராஜர் நகர் அருகே உள்ள சாலையோரம், பழமையான பூச்சி விழுந்த புளியமரம் ஒன்று உள்ளது. இந்த புளியமரம் வேகமாக காற்று அடித்தால், சாலைகளில் செல்வோர் மீது விழுந்து விடும் நிலையில் உள்ளது. எனவே உடனடியாக இந்த புளியமரத்தை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.