குடவாசல், ஜூலை 30 - இந்திய சுதந்தி ரத்தின் 75 ஆவது ஆண் டையொட்டி, தமிழகம் முழுவதும் ஜூலை 25 முதல் ஜூலை 30 வரை அமுத பெருவிழா ஒன்றிய அரசின் பல் வேறு துறை சார்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதி யாக திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள மஞ்சக் குடி சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை களில் ‘ஒளிமிகு இந்தியா - ஒளிமயமான எதிர்காலம் 2047’ என்ற நிகழ்ச்சி மின் வாரியம் சார்பாக நடத்தப்பட்டது. சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். திரு வாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் சிறப்புரையாற்றினார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமை வகித்தார். கிராம மின்மயமாக்க கழக மண்டல பொறுப்பு அலுவலர் தாரா ரமேஷ், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் (பொ) தெ.காளிதாஸ், மற்றும் கல்லூரி தாளாளர் எம்.ஜி.சீனிவாசன் ஆகி யோர் வரவேற்றனர். ஜி.டி.குழுமம் நிர்வாகி வழக்கறிஞர் ஜி.டி.சிவசங்கரன், குடவாசல் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.முருகேசன், மஞ்சக்குடி விப்ரோ தலைவர் ராஜகோபால், ரெட் கிராஸ் தலைவர் டி.எஸ்.அசோகன் ஆகி யோர் மின் பயனாளிகள் என்ற தலைப்பில் பேசினர். நிகழ்ச்சியை மாவட்ட மின்வாரிய அலுவலக பொறியாளர்கள், குடவாசல் துணை மின் வாரிய உதவி பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.