districts

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு விசாரணையில் அலட்சியம்: காவல்துறைக்கு சிபிஎம் கண்டனம்

திருவாரூர், மே 30 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியை சேர்ந்தவர் கே.ஜி.ரகுரா மன். இவர் சிபிஎம் மாவட்ட செயற்குழு  உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது மனைவி நகர்மன்ற உறுப்பி னராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந் தார். இந்நிலையில் கடந்த மார்ச் 3 அன்று இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு  வீசப்பட்டது. பேரூராட்சி மற்றும் நகராட் சிக்கான தேர்தல் முடிவுகள் வெளி யாகி, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவியேற்புக்காக காத்திருந்த சூழலில்  பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  திருவாரூர் மாவட்டத்தில் தொ டர்ந்து அரசியல் ரீதியான படுகொலை கள் அரங்கேறி வருகிற சூழலில், பெட் ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அர சியல் எதிரிகளால் நிகழ்த்தப்பட்டிருக்க லாம் என பொதுமக்கள் சந்தேகத்தை எழுப்பினர். இது தொடர்பாக சிபிஎம்  சார்பில் திருத்துறைப்பூண்டி காவல்  நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட் டிருந்தது. ஆனால் இதுவரை காவல்துறை  குற்றவாளிகளை கைது செய்ய வில்லை.  இந்நிலையில் சிபிஎம் மாவட்டக்குழு  கூட்டம் கட்சியின் மாவட்டக்குழு அலுவ லகமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவ கத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிற கே.ஜி.ரகுராமன் வீட்டில் பெட் ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொ டர்பாக உரிய முறையில் புகார் அளிக் கப்பட்டிருந்த போதும், இது தொடர்பான  விசாரணையில் காவல்துறை அலட்சிய மாக அணுகுவதோடு மெத்தனமாக செயல்படுவதை மாவட்டக்குழு வன்மை யாகக் கண்டித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மேலும் இன்னும் 10 நாட்களுக்குள் இச்சம்பவம் தொடர்பாக விரைவான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்யத் தவறினால் திருத்துறைப் பூண்டி காவல்நிலையம் முன்பாக பொது மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் படும் எனவும் சிபிஎம் மாவட்டக்குழு அறி வித்துள்ளது.